Saturday, September 19, 2009

நானாய் இருக்கிறேன்

வருடம் முழுக்க பேசினாய்...

வகிடு கூந்தலை வருடினாய்..

துக்கத்தில் சுமைதாங்கியானாய்..

இப்படி உன்னை சொல்ல

என்னிடம் எதுவுமில்லை..!

என்றாவது ஒரு நாள்

நீ வருவாயென காத்திருக்கிறேன்..

அப்பா, அம்மா, அண்ணா

என அன்பாய் உள்ள இந்த கூட்டை

கலைக்க வருவாய் நிச்சயம்..

அழுகையும் கண்ணீருமாய் வழியனுப்ப..

காத்திருக்கும் கூட்டம் ..

இவர்களின் கண்ணீர் பிரிதல்.

சந்தோசமாய் !

இத்தனை வருட வழ்க்கையை

தொலைத்து விட்டு

உன்னொடு உறவாட

உருவாக்கப்படு காத்திருக்கிறேன்...

எந்த எதிர்பார்ப்பும் இன்றி...

எதை எதை கேட்க போகிறாயோ

இதில் நான் என்ன பொருட்டு..

இருக்கும் வரை இயல்பாய்

நானாய் இருக்கிறேன்

என்னொடு.. என்றும்

வாழும் கனவுகளொடு..!

source : http://thamaraimanalan.blogspot.com/

ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்லி..
அலங்கரித்த பொழுதில்
ஒருவரை ஒருவர் கை கோர்த்தோம்..

பூக்களின் வாசனையை
நுகர்ந்த வேகத்தில்
எதிர்பார்ப்புகளின் கேள்விக்குறி..

இருவரின் இடையில்...
நீ, நான் என
தினம் போட்டியிட்டு
இருளின் கொடுமையில்
உறவுகளைப் புதிப்பித்து கொள்கிறோம்...

வியப்பாகவேயுள்ளது..
விடியும் பொழுது..
எத்தனை நாட்களுக்கு என.. ?

எது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
இருவருக்குள்ளும்..

எப்போதோ உண்மையாய்
பறிமாறிக் கொண்ட..
அன்பின் ஈரம்
இன்னும் மிச்சமிருக்கோ..
இருவருக்குள்ளும்...!

source : http://thamaraimanalan.blogspot.com/

காத்திருக்கிறேன்......!

காத்திருக்கிறேன்......!
மௌனத்தின் சப்தங்களில்
உன்னுடன் பேசவே..
காத்திருக்கிறேன்.. !
ஆயிரமாயிர விஷயங்கள்
பேசி என்ன ...
நீ.. சொல்லாத..
நான் கேட்காத
வார்த்தைகள்
இரண்டு பேருக்குள்ளும் ....
மௌனமாய் ....!
வெளிச்ச கீற்றுக்குள் ..
எத்தனையோ பதிவுகள்..
ஆனாலும்,
உன்னின் நொடிபொழுது
பார்வை தேடியே
காத்திருக்கிறேன்....!
நீ..
எபோதுமே
உன் வேலையில்

நான் மட்டும்
எல்லா வேலைகளும்
தவிர்த்து..
காத்திருக்கிறேன்..!
எங்கும் எதிலும்
உன்னின் ஆக்கிரமிப்பு..
என் நினைவுகளின்
'ஸ்பான்சர் '
நீதானா..?
யாருமற்று
நீயும் நானும்
தனித்திருக்கும்
பொழுதிர்க்காக காத்திருக்கிறேன்..!
எனக்கும் தெரியும்..
அந்த பொழுதில்
அடுத்த வார்த்தையின்றிதவிப்பேன்..
புத்தியோடு..
ஆகையால்..
மௌனத்தின் சப்தங்களில்
உன்னுடன் பேசவே..
காத்திருக்கிறேன்.. !

Source : http://thamaraimanalan.blogspot.com/