Saturday, September 19, 2009

நானாய் இருக்கிறேன்

வருடம் முழுக்க பேசினாய்...

வகிடு கூந்தலை வருடினாய்..

துக்கத்தில் சுமைதாங்கியானாய்..

இப்படி உன்னை சொல்ல

என்னிடம் எதுவுமில்லை..!

என்றாவது ஒரு நாள்

நீ வருவாயென காத்திருக்கிறேன்..

அப்பா, அம்மா, அண்ணா

என அன்பாய் உள்ள இந்த கூட்டை

கலைக்க வருவாய் நிச்சயம்..

அழுகையும் கண்ணீருமாய் வழியனுப்ப..

காத்திருக்கும் கூட்டம் ..

இவர்களின் கண்ணீர் பிரிதல்.

சந்தோசமாய் !

இத்தனை வருட வழ்க்கையை

தொலைத்து விட்டு

உன்னொடு உறவாட

உருவாக்கப்படு காத்திருக்கிறேன்...

எந்த எதிர்பார்ப்பும் இன்றி...

எதை எதை கேட்க போகிறாயோ

இதில் நான் என்ன பொருட்டு..

இருக்கும் வரை இயல்பாய்

நானாய் இருக்கிறேன்

என்னொடு.. என்றும்

வாழும் கனவுகளொடு..!

source : http://thamaraimanalan.blogspot.com/

No comments:

Post a Comment