Saturday, September 19, 2009

காத்திருக்கிறேன்......!

காத்திருக்கிறேன்......!
மௌனத்தின் சப்தங்களில்
உன்னுடன் பேசவே..
காத்திருக்கிறேன்.. !
ஆயிரமாயிர விஷயங்கள்
பேசி என்ன ...
நீ.. சொல்லாத..
நான் கேட்காத
வார்த்தைகள்
இரண்டு பேருக்குள்ளும் ....
மௌனமாய் ....!
வெளிச்ச கீற்றுக்குள் ..
எத்தனையோ பதிவுகள்..
ஆனாலும்,
உன்னின் நொடிபொழுது
பார்வை தேடியே
காத்திருக்கிறேன்....!
நீ..
எபோதுமே
உன் வேலையில்

நான் மட்டும்
எல்லா வேலைகளும்
தவிர்த்து..
காத்திருக்கிறேன்..!
எங்கும் எதிலும்
உன்னின் ஆக்கிரமிப்பு..
என் நினைவுகளின்
'ஸ்பான்சர் '
நீதானா..?
யாருமற்று
நீயும் நானும்
தனித்திருக்கும்
பொழுதிர்க்காக காத்திருக்கிறேன்..!
எனக்கும் தெரியும்..
அந்த பொழுதில்
அடுத்த வார்த்தையின்றிதவிப்பேன்..
புத்தியோடு..
ஆகையால்..
மௌனத்தின் சப்தங்களில்
உன்னுடன் பேசவே..
காத்திருக்கிறேன்.. !

Source : http://thamaraimanalan.blogspot.com/

No comments:

Post a Comment